முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஜபல்பூர் நிலையம் அருகே தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Updated On : 7 செப்டம்பர், 2024 at 6:21 AM
ஜபல்பூர் நிலையம் அருகே தடம் புரண்ட இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயில்
பகிர்:

ஜபல்பூர்: இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஜபல்பூர் நிலையம் அருகே தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில், நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் "இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் (22191) இரண்டு பெட்டிகள் ஜபல்பூர் நிலையத்தின் 6 ஆவது நடைமேடையை நோக்கி வந்து கொண்டிருந்த போது சுமார் 50 மீட்டர் தூரத்தில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது" என்று அந்த அதிகாரி கூறினார்.

மேலும் ரயில் மெதுவாக வந்ததால் நல்வாய்ப்பாக பெரும் உயிரிழப்பு, சேதங்கள் போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை என்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்ட சம்பவம் ரயில் பயணிகள் மற்றும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முழு கட்டுரையைப் படிக்க →