சென்னை, பிப், 13 - கார்டுதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு இனி 30 கிலோ அரிசி குறைந்தபட்சம் கிடைக்கும்.
மாதம் ரூ. 500-ம் அதற்கு அதிகமாகவும் வருமானம் உள்ளவர்களின் கார்டுகளுக்கு கிலோ ரூ. 2-50 வீதம் 30 கிலோ பச்சரிசி சப்ளை செய்யப்படும். இதுவரை 20 கிலோ சப்ளை செய்யப்பட்டு வந்தது.
'சென்னை நகர், கோவை, குமரி ஜில்லாவில் எல்லைப் பகுதி ஆகியவற்றிலுள்ள கார்டுதாரர்களும், நீலகிரி ஜில்லாவிலுள்ள கார்டுதாரர்களும் தற்போதுள்ள அளவில் அல்லது 30 கிலோ - இதில் எது அதிகமோ அதனை பெறலாம்.
இந்த உத்தரவு நடப்பு மாதத்திலிருந்து அமலுக்கு வருகிறது.
ஹைதராபாத், பிப். 14 - இன்று அதிகாலையில் போங்கிர் ஸ்டேஷன் அருகில் கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன. பிரயாணிகள் யாரும் காயமடையவில்லை. (ஹைதராபாத்திலிருந்து சுமார் 28 மைல் தொலைவில் உள்ள இடம் இது.)
"லூப்" லைனிலிருந்து, மெயின் லைனுக்கு ரயில் மாறுகையில், இந்த விபத்து நேரிட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
முதலிருந்த 4 பெட்டிகளும் கடைசியிலிருந்த 3 பெட்டிகளும் தண்டவாளத்திலிருந்து இறங்கவில்லை. நடுவிலிருந்த 7 பெட்டிகள் தான் தடம் புரண்டன என்றும், அவற்றின் பெட்டிகள் தூள் தூளாகநொறுங்விட்டன. என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.
முன் பகுதியில் இருந்த 4 பெட்டிகளை வேறு ஒரு இஞ்ஜின் இழுத்துக் கொண்டு காலை 6 மணிக்கு செகந்திராபாத் வந்து சேர்ந்தது. இதில் பிரயாணிகள் வந்தனர்.
விபத்து ஏற்பட்டபோது உயரே படுத்துக் கொண்டிருந்த சில பிரயாணிகள் கீழே விழுந்து விட்டனர். ஆனால் காயம் ஏற்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.