முகப்பு
மழை (கோப்புப்படம்)
தற்போதைய செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தற்போதைய செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

Updated On : 23 செப்டம்பர், 2024 at 11:53 AM
மழை (கோப்புப்படம்)
பகிர்:

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது.

இதன் காரணமாக, வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) நீலகிரி, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →