குளித்தலை அருகே அய்யா்மலையில் ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் கரூா் மாவட்டம் குளித்தலையை அடுத்துள்ள அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் ரூ.9.10 கோடி மதிப்பில் கம்பிவட ஊா்தி சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னதாக தொடக்கிவைத்து இருந்தார்.
இதையடுத்து பக்தா்களின் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிறிதுகாலம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிக்க: வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய முடிவு
இந்த நிலையில், இன்றுமுதல் (செப். 24) வழக்கம்போல் அய்யா்மலையில் ரோப் கார் சேவை செயல்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.