ஏடிஎம்களில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  Center-Center-Chennai
தற்போதைய செய்திகள்

ஏடிஎம்களில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் இருப்பதை உறுதி செய்க: வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு

சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்

DIN

புதுதில்லி: சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பெரும்பாலும் ரூ.500 நோட்டுகளே நிரப்பப்படுகிறது. ஆனால் சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் கிடைப்பதில்லை. இதனால் ரூ.500 நோட்டுகளை ரூ.100, ரூ.200 நோட்டுகளாக மாற்றுவதற்கு மக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.

இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கிக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில், அனைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களிலும் சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

அனைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

செப்டம்பர் 30-க்குள் அனைத்து வங்கி ஏடிஎம் இயந்திரங்களிலும் 75 சதவிகிதம் ரூ.100, ரூ.200 நோட்டுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், 2026 மார்ச் மாதத்திற்குள் ஏடிஎம் இயந்திரங்களிலும் இதனை 90 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.

எடிஎம் இயந்திரங்களில் அதிகளவில் ரூ.500 நோட்டுகள் மட்டும் விநியோகிக்கப்படுவதால் அதனை ரூ.100, ரூ.200 நோட்டுகளாக மாற்றுவதற்கு மக்கள் சிரமங்களை சந்திக்கும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளின் பணப்புழக்கத்தை மக்களிடையே அதிகப்படுத்தும் விதமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT