மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,750 கன அடியிலிருந்து வினாடிக்கு 56,996 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக திங்கள்கிழமை மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 40,750 கன அடியிலிருந்து வினாடிக்கு 56,996 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 40,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,300 கன அடி நீரும், உபரிநீர் போக்கி வழியாக வினாடிக்கு 18,700 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
விவசாயத்தின் உயிர்நாடியாக போற்றப்பட்டும் மேட்டூர் அணைக்கு இன்று 92 ஆவது பிறந்த நாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.