அய்யனார் கோயிலில் விடிய விடிய நடைபெற்ற குதிரை எடுப்பு விழாவில் மண்பாண்ட கலைஞர்களால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மண் குதிரைகளை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தோலில் சுமந்து வந்து பக்தர்கள் கோயிலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  
தற்போதைய செய்திகள்

விராலிமலை அருகே அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

இணையதளச் செய்திப் பிரிவு

விராலிமலை அருகே உள்ள வேலூர் அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள அய்யனார் கோயில் சிறப்பு பெற்ற தலமாகும். அந்த பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு குலதெய்வமாகவும் சுற்று வட்டாரங்களுக்கு காவல் தெய்வமாகவும் விளங்கி வரும் அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா நிகழாண்டு நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் களிமண்ணால் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய வடிவிலான மண் குதிரைகளை பக்தர்கள் தோளில் சுமந்து வந்து கோயிலில் காணிக்கையாக செலுத்தினர்.

கீழ தொட்டியபட்டியைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர்களால் பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்ட சுடுமண் குதிரைகளை வான வேடிக்கை முழங்க பக்தர்கள் குடும்பம் குடும்பமாக சுமார் 2 கிலோ மீட்டர் தோளில் சுமந்து வந்து வேலூர் அய்யனார் கோயிலில் வைத்து பூஜை செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

குதிரை எடுப்பு விழாவை முன்னிட்டு வேலூர் பகுதி முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஊரே ஜொலித்தது. விழாவையொட்டி இரவு முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

Horse-raising ceremony and artistic performances were held at the Vellore Ayyanar Temple near Viralimalai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமகவின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது: தில்லி உயர்நீதிமன்றம்

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை!

மூன் வாக் - 5 பாடல்களையும் பாடிய ஏ. ஆர். ரஹ்மான்!

ஏ.வி.எம். சரவணன்: அன்புமணி ராமதாஸ், திருநாவுக்கரசர் இரங்கல்

அன்புமணிதான் தலைவர்; பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்! - தேர்தல் ஆணையம் பதில்

SCROLL FOR NEXT