கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை?

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், சனிக்கிழமை (டிச.6) முதல் டிச.11 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) கோவை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தேனி, நீலகிரி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 5) அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Which districts will receive rain in the next 2 hours?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள்: பிரதமர் மோடி!

பிரச்னையான அரசாக திமுக: தமிழிசை

பாக்கெட்டுகளில் பொருள்களை வாங்கி ரீஃபிள் செய்பவரா நீங்கள்?

ஓடிடியில் சர்வம் மாயா..! 7 மொழிகளில் ரிலீஸ்!

ஒரிஜினல் பட்டுப் புடவையா என்பதை அறிவது எப்படி?

SCROLL FOR NEXT