சென்னையில் ரௌடியை சுட்டுப்பிடித்த போலீசார்!
சென்னை எண்ணூரில் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரௌடியை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தது தொடர்பாக...
சென்னை எண்ணூரில் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரௌடியை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.
கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரௌடி விக்கி எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து உதவி ஆய்வாளர் நவீன் தலைமையிலான போலீசார் ரௌடி விக்கியை பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார்.
இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் அவரை காலில் சுட்டுப் பிடித்து கைது செய்துள்ளனர்.
ரௌடியை துப்பாக்கிச் சூட்டு பிடித்த காவல் உதவி ஆய்வாளர் நவீன், துப்பாக்கிட்டில் காயமடைந்த ரௌடி விக்கி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரௌடி விக்கியை பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்.