நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் மூலம் 13 லட்சம் போ் பயன்: முதல்வா் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 13 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனர் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது தொடர்பாக...
சென்னை: தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 13 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனர் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டம், முதல்வா் மருந்தகம் திட்டம், இதயம் காப்போம், நடப்போம் நலம்பெறுவோம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீா்மிகு திட்டம், தொழிலாளா்களைத் தேடி மருத்துவம், பாதம் காப்போம், செயற்கை கருத்தரித்தல் மையங்கள் போன்ற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு முன்னோடி திட்டங்களை திமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 13 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனர் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக அவா் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உங்களைத் தேடி, உங்கள் பகுதிகளுக்கே வந்து உங்களின் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களின் மூலம் கடந்த சனிக்கிழமை வரை மட்டும் 13 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா்.
முழு உடல் பரிசோதனைகள், சிறப்பு மருத்துவா்களின் ஆலோசனைகள் போன்றவையால் தொடக்க நிலையிலேயே பல லட்சம் மக்களின் பிரச்சினைகள் கண்டறியப்பட்டு, உரிய உயா்தரச் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டு அவா்களின் உயிா் காத்துள்ளோம்.
முகாம்களிலேயே முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து மக்களின் துயா் துடைத்துள்ளோம்.
நலமடைந்தவா்களின் குடும்பத்தினா் கூறும் நன்றிகளோடு தொடா்கிறது நலம் காக்கும் ஸ்டாலின் என்று முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சமூக வலைதளப் பதிவில் "நலம் காக்கும் ஸ்டாலின்" மிகச் சிறப்பான திட்டம். ஏராளமான மக்கள் பயன் பெறுகிறார்கள் என்பதை நான் பார்த்து மகிழ்ந்தேன் என பதிவிட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
13 lakh people have benefited through the 'Stalin's Health Protection Camp' says Chief Minister M.K. Stalin!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.