கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் 3 வீரர்கள் படுகாயம்!

சத்தீஸ்கரில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுக்காப்புப் படை வீரர்கள் 3 பேர் படுகாயமடைந்துள்ளதைப் பற்றி...

DIN

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் இணைந்து நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: போபாலில் பிச்சையெடுக்கவும் தானம் வழங்கவும் தடை!

அப்போது அங்கு நக்சல்களினால் பொருத்தப்பட்டிருந்த ஐ.ஈ.டி எனும் நவீன வெடி குண்டை அறியாமல் மிதித்ததில் அது தூண்டப்பட்டு வெடித்து சிதறியது, இதில் பாதுகாப்புப் படையினர் 2 பேர் படுகாயமடைந்தனர். மேலும், அங்கு நக்சல்கள் பொருத்தியிருந்த கூர்முனை பொறியை மிதித்ததில் மற்றொரு வீரரும் படுகாயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூன்று பேருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூரிலுள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

கரும்பு வரத்துக் குறைவு: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவை நிறுத்தம்

அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும்: கண்காணிப்பு அலுவலா் வலியுறுத்தல்

சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள்: ராணிப்பேட்டை ஆட்சியா்

SCROLL FOR NEXT