FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மணிப்பூர்: சட்டவிரோதமான சோதனைச் சாவடிகள் தகர்ப்பு!

மணிப்பூரில் சட்டவிரோதமான சோதனைச் சாவடிகள் தகர்க்கப்பட்டுள்ளதைப் பற்றி...

16 பிப்ரவரி 2025, 11:56 am IST
கோப்புப் படம்
பகிர்:

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சட்டவிரோதமாக நிறுவப்பட்ட சோதனைச் சாவடிகளை பாதுகாப்புப் படையினர் தகர்த்துள்ளனர்.

சூராச்சந்திரப்பூர் மாவட்டத்திலுள்ள கப்ராங் மற்றும் எஸ் கவாட்லியன் ஆகிய இரு கிராமத்தில் கிராமவாசிகளினால் நிறுவப்பட்ட சோதனைச் சாவடிகளை அம்மாநில கூட்டுப் பாதுகாப்புப் படையினர் தகர்த்துள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அம்மாநிலத்தில் இருகுழுக்களுக்கு இடையே நடைபெற்று வரும் வன்முறைகளைத் தொடர்ந்து இந்த சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டு கிராமவாசிகளினால் இயக்கப்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: தில்லி கூட்ட நெரிசல்: உயர்நிலைக் குழு விசாரணை!

இதனைத் தொடர்ந்து, அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு செல்போன் மூலம் அழைத்து மர்ம நபர்கள் மணிப்பூர் சம்பவங்கள் குறித்து தவறான தகவல்கள் கூறுவதாகவும், இந்த விவகாரத்தில் காவல் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் அம்மாநில முதல்வர் பிரண் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments