பிப். 25-ல் தமிழ்நாட்டுக்கு வரும் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
வருகிற பிப். 25ல் தமிழ்நாட்டுக்கு வரும் அமித் ஷாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவிப்பு.
வருகிற பிப். 25 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகைதரும் அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில்,
"புரட்சியாளர் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசியும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்க பிப்ரவரி 25-ல் வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக எனது தலைமையில் மாபெரும் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கோவையில் உள்ள ஈஷா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்ள தமிழகம் வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நாள்களுக்கு முன்பு மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆந்திரம், ஒடிசா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு 1,555 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டிருந்தார். ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.