கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

குஜராத்தில் மீண்டும் நிலநடுக்கம்!

குஜாராத் மாநிலத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைப் பற்றி..

DIN

குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் இன்று காலை 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது.

குஜராத்தின் காந்தி நகரைச் சார்ந்த நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கட்சு மாவட்டத்தின் பச்சாவு நகரத்திற்கு வடக்கு-வட கிழக்கிலிருந்து 23 கி.மீ தொலைவில் மையமாக கொண்டு இன்று (ஜன.1) காலை 10.24 மணியளவில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வினால் எந்தவொரு உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மணிப்பூர் கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் கட்சு மாவட்டத்தில் 4 முறை 3 ரிக்டர் அளவுக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் அபாயமுள்ள பகுதியான குஜராத்து மாநிலம் கடந்த 200 ஆண்டுகளில் 9 சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT