முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை மெரீனா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் குவியும் மக்கள்!

புத்தாண்டைக் கொண்டாட சென்னை கடற்கரைகளில் மக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

Updated On : 1 ஜனவரி, 2025 at 12:12 PM
கோப்புப் படம்
பகிர்:

புத்தாண்டைக் கொண்டாட சென்னை கடற்கரைகளில் மக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை வெகுவிமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். கோயில்கள், சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூட்டம் இன்று அதிகமாகக் காணப்படுகிறது.

இந்நிலையில் புத்தாண்டைக் கொண்டாட கடற்கரைகளுக்கு மக்கள் அதிகளவில் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைகளில் மக்கள் அதிக அளவில் வந்துகொண்டிருக்கின்றனர். இதனால் கடற்கரைச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடலில் இறங்கி குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரைகளில் காவல்துறையினர் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →