புத்தாண்டைக் கொண்டாட சென்னை கடற்கரைகளில் மக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை வெகுவிமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். கோயில்கள், சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூட்டம் இன்று அதிகமாகக் காணப்படுகிறது.
இந்நிலையில் புத்தாண்டைக் கொண்டாட கடற்கரைகளுக்கு மக்கள் அதிகளவில் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
இதையும் படிக்க | மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்கத் தடையா?
சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைகளில் மக்கள் அதிக அளவில் வந்துகொண்டிருக்கின்றனர். இதனால் கடற்கரைச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடலில் இறங்கி குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரைகளில் காவல்துறையினர் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.