முகப்பு
தற்போதைய செய்திகள்

திமுகவினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

அனுமதியின்றி போராட்டங்களை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

Updated On : 8 ஜனவரி, 2025 at 11:35 AM
பகிர்:

அனுமதியின்றி போராட்டங்களை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை நேரமில்லாத நேரத்தில், அண்ணா பல்கலை. மாணவி வழக்கு தொடா்பான விவாதத்தில் பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி பேசினாா். அப்போது, ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்குக் கூட காவல் துறை அனுமதி தருவதில்லை என்று குற்றஞ்சாட்டினாா்.

இதற்கு பதிலளித்த முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

Advertisement

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு இடங்களில் அனுமதியோடு போராட்டங்கள் நடைபெறுகின்றன. போராட்டம் நடத்த உரிய முன் அனுமதி பெற வேண்டும். போராட்டம் செய்வதற்கென சில பகுதிகள் உள்ளன. திடீரென்று அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறும்போது வழக்கு போடப்படுகிறது என்றாா் முதல்வா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.