கோப்புப் படம் Dinamani
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரம்: போதைப் பொருள் கடத்திய நபர் கைது!

மகாராஷ்டிரத்தில் போதைப் பொருள் கடத்திய நபர் கைது செய்யப்பட்டதைப் பற்றி..

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் போதைப் பொருள் கடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் இன்று (ஜன.8) தெரிவித்துள்ளனர்.

தாணே மாவட்டத்தில் அம்மாநில காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த ஜன.6 அன்று பிவாண்டி பகுதியிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு தங்கியிருந்த அஹமது சகில் அஹமது மாலிக் (எ) சோனு என்பவரைச் சோதனை செய்ததில் அவர் 110 கிராம் அளவிலான எம்.டி எனும் போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் அந்த போதைப் பொருளை பிவாண்டி பகுதியைச் சேர்ந்த ரவீஷ் என்பவரிடம் இருந்து வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பானது ரூ.11.22 லட்சம் எனக் கூறப்படுகிறது.

பின்னர், அவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய ரவீஷை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்ற 5 போ் கைது

ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மீட்பு

பைக் மீது காா் மோதி விபத்து: நடத்துநா் உயிரிழப்பு

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி: கமுதி மாணவா்கள் வெற்றி

விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை தடகளப் போட்டிகள்! 300 மாணவா்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT