கேரள மாநிலம் மலப்புரத்தில் மசூதி திருவிழாவின்போது அழைத்து வரப்பட்ட யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ஒருவர் இன்று பலியாகியுள்ளார்.
மலப்புரத்தின் திரூரிலுள்ள மசூதி திருவிழாவிற்காக கடந்த ஜன.8 அன்று யானை ஒன்று அழைத்து வரப்பட்டது. ஊர்வலமாக சென்றுக் கொண்டிருந்த யானைக்கு திடீரென மதம் பிடித்து அருகிலிருந்தவர்களை தாக்கியது.
அப்போது எழூரைச் சேர்ந்த கிருஷ்ணகுட்டி (வயது 59) என்பரை அந்த யானை தனது தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கோட்டக்கலிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இதையும் படிக்க: நானும் மனிதன்தான், தவறு செய்திருக்கலாம்: பிரதமர் மோடியின் முதல் நேர்காணல்
அவரது உடல் நிலை தொடர்ந்து மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறப்பட்டிருந்த நிலையில், இன்று (ஜன.10) அவர் சிகிச்சைப் பலனின்றி பலியானார்.
முன்னதாக, திருவிழாவின் போது மதம் பிடித்து மிரண்டு ஒடிய யானையிடம் இருந்து தப்பித்து ஒட முயன்றவர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்ததில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பின்னர், நீண்ட நேர முயற்சிக்கு பிறகு அந்த யானை பாகன்களால் கட்டுப்படுத்தப்பட்டு சங்கிலியில் பிணைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.