பான் கார்டு விண்ணப்பிக்கும் தளத்தில் தமிழைச் சேர்க்க வேண்டும்: விஜய் சேதுபதி
பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் தமிழ் மொழியும் சேர்க்க வேண்டும் என்று விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என்று விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் வருமானத்துறையினர் நடத்திய நிகழ்ச்சியொன்றில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
”அரசு சார்ந்த சில விஷயங்களை தெரிந்துக் கொள்வதற்கு மற்றவர்களைக் கேட்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி, அவற்றின் சிக்கல்கள் போன்றவற்றை எளிமையாகத் தெரிந்துக் கொள்வதற்கு அரசு இணையதளம் ஒன்றை உருவாக்கி உள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: அபிநயாவுக்கு விரைவில் திருமணம்!
குழந்தைகளும் புரிந்துகொள்ளும் வகையில் கார்ட்டூன் விடியோவாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும். தமிழ் மொழியும் இருந்தால் மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் அனைவரும் எளிதாகப் பயன்படுத்தலாம்.
வருமான வரி செலுத்துவது அவசியம். வருமான வரி செலுத்துவோருக்கு ஏதாவது பலன்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்று பேசினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.