முகப்பு
தற்போதைய செய்திகள்

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு

மியான்மரில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

Updated On : 3 ஜூலை, 2025 at 4:08 AM
மியான்மரில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
பகிர்:

மியான்மரில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

தேசிய நில அதிர்வு மைய அறிக்கையின் படி, மியான்மரில் வியாழக்கிழமை காலை 6.10 மணியளவில் பூமிக்கடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாகப் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் என்ற எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம், பாதிப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த மாததில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம். ஜூலை 1 ஆம் தேதி பூமிக்கடியில் 135 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவாகியிருந்தது.

Summary

An earthquake of magnitude 4.1 struck Myanmar on Thursday, a statement by the National Center for Seismology (NCS) said.

முழு கட்டுரையைப் படிக்க →