தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு
புகழ்பெற்ற தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள புகழ்பெற்ற தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் யுனெஸ்கோ அறிவித்த புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலமாகவும், இரண்டாம் ராஜராஜசோழன் கட்டிய ஐராவதேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து தற்போது வரை மக்களின் வழிபாட்டில் உள்ளது.
இந்த கோயிலில் உள்ள கிழக்கு வாசலில் கோபுரம் மொட்டையாக உள்ளது. அது குறித்து தஞ்சாவூர் மாவட்ட தொல்லியல் துறையினர் புதன்கிழமை ஆய்வு செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
ஐராவதேசுவரா் கோயில் கட்டட வடிவமைப்பு, மொட்டை கோபுரம் குறித்த புதிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.