கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

காயமடைந்து சிகிச்சை பெற்ற யானை உயிரிழப்பு!

ஜார்க்கண்டில் காயமடைந்து சிகிச்சை பெற்ற யானை உயிரிழந்துள்ளதைப் பற்றி...

DIN

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த யானை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்டேகா மாவட்டத்தின் அவ்கா-கர்ஸா வனப்பகுதியில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு வலது காலில் காயமடைந்த நிலையில் யானை ஒன்று சுற்றி வருவதாக கிராமவாசிகள் சிலர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் அடிப்படையில் 5 வயதுடைய அந்த யானைக்கு வனத்துறை அதிகாரிகளும் கால்நடை மருத்துவர்களும் சிகிச்சையளித்து வந்துள்ளனர். மேலும், அந்த யானையை கண்கானிக்க 2 பேர் நியமிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காயங்கள் குணமாகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை!

இந்நிலையில், கடந்த மார்ச் 4 அன்று வனத்துறை அதிகாரிகள் அந்த யானைக்கு சிகிச்சையளித்து விட்டு திரும்பிய நிலையில், நேற்று (மார்ச் 5) உயிரிழந்த நிலையில் அந்த யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, யானையை யாரோ பிடிக்க முயன்றதினால்தான் அதற்கு காயங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்த முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரையில் ஆண் சடலம்

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

SCROLL FOR NEXT