எடப்பாடி பழனிச்சாமியுடன் சேவூர் ராமச்சந்திரன் (கோப்புப் படம்) X | Sevoor S Ramachandran
தற்போதைய செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது பற்றி..

DIN

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஆரணி தொகுதி எம்எல்ஏவுமான சேவூர் ராமச்சந்திரன், வருமானத்திற்கு அதிகமாக ரூ. 8 கோடி சொத்து சேர்த்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.

ஆரணியில் உள்ள அவரது வீட்டில் தொடர்ந்து 2-வது நாளாக இன்று(சனிக்கிழமை) சோதனை நடைபெற்று வருகிறது. அவரது மகன்கள் மகன்கள் விஜயகுமார், சந்தோஷ்குமார் வீடுகளிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 2016 - 2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது சேவூர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக 125% சொத்துகள் சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சேவூர் ராமச்சந்திரனின் மனைவி மணிமேகலை, மகன்கள் விஜயகுமார், சந்தோஷ் குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

தலைநகரில் தொடரும் மழை; ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்!

மோசடி வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபா் கைது

கத்தி குத்து சம்பவம்: 4 சிறாா்கள் கைது

SCROLL FOR NEXT