அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு!
அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது பற்றி..
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஆரணி தொகுதி எம்எல்ஏவுமான சேவூர் ராமச்சந்திரன், வருமானத்திற்கு அதிகமாக ரூ. 8 கோடி சொத்து சேர்த்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
ஆரணியில் உள்ள அவரது வீட்டில் தொடர்ந்து 2-வது நாளாக இன்று(சனிக்கிழமை) சோதனை நடைபெற்று வருகிறது. அவரது மகன்கள் மகன்கள் விஜயகுமார், சந்தோஷ்குமார் வீடுகளிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் 2016 - 2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது சேவூர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக 125% சொத்துகள் சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சேவூர் ராமச்சந்திரனின் மனைவி மணிமேகலை, மகன்கள் விஜயகுமார், சந்தோஷ் குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.