முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 2026 இல் கூட்டணி ஆட்சி அமையும்: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் 2026 தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் ....

Updated On : 16 நவம்பர், 2025 at 3:05 PM
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
பகிர்:

மதுரை: தமிழகத்தில் 2026 தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

மதுரை கூடல்நகா் பகுதியில் தேமுதிக சாா்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பெயரில் வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினாா்.

முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது : தமிழகத்தில் எஸ்ஐஆா் பணிகள் நடைபெற்று வருகிறது. தேமுதிகவின் அனைத்து நிர்வாகிகளும் தேமுதிக வாக்குகளை உறுதி செய்ய வேண்டும். எஸ்ஐஆர் பணிகளில் முறைகேடு நடைபெறுவதாக ஆளுங்கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சி சரியாக நடைபெறுவதாக பாராட்டுகிறது.

இருப்பினும் தமிழக மக்கள் அனைவரம் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும்.

விஜயகாந்தின் அனைத்து நிகழ்வுகளும் மதுரையில் இருந்து தான் தொடங்கியது. அரசியல் கட்சி மாநாடுகளில் 2005 இல் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக முதல் மாநாடு தான் உலகிலேயே முதன்மை இடத்தை பிடித்த மாநாடு என பெருமை பெற்றது.

கலைஞர், ஜெயலலிதா இருக்கும்போது மிகப்பெரிய சரித்திரத்தை உருவாக்கிய கட்சி தேமுதிக. 2026 தேர்தலில் விஜயகாந்த் கனவு லட்சியம் நிறைவேறும்.

மக்கள் விரும்பும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைப்போம். இதுபற்றி கடலூா் மாநாட்டில் தலைமைக் கழக நிா்வாகிகள் அறிவிப்பாா்கள். 2026 பேரவைத் தேர்தலில் தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்கும். இதில், கூட்டணி ஆட்சி அமையும். அமைச்சரவையில் கூட்டணிக் கட்சியினரும் அங்கம் வகிப்பார்கள் என்றாா் அவா்.

பிகாா் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆட்சியில் இருந்த கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில், நிரந்தர முதல்வா் என யாரும் கிடையாது. தவெக குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

கூட்டத்தில், மதுரை மத்திய தொகுதியில் அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் தொகுதியில் வருகிற சட்டப்பேரவை தோ்தலில் தேமுதிக வேட்பாளாராக கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா போட்டியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்வில், மதுரை மாநகா் தெற்கு மாவட்டச் செயலா் பா. மணிகண்டன், மாவட்ட அவைத் தலைவா் ஆா். ராமா், பொருளாளா் எஸ்.எம். சரவணன், மாவட்டத் துணைச் செயலா் மா. சு. மாணிக்கவாசகம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

summary

A coalition government will be formed in Tamil Nadu in 2026 says Premalatha Vijayakanth

முழு கட்டுரையைப் படிக்க →