முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழக அரசு அனுப்பிய மெட்ரோ திட்ட அறிக்கையில் குறைகள்!

தமிழ்நாடு அரசு அனுப்பிய மெட்ரோ திட்ட அறிக்கையில் குறைகள் இருப்பதால் மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக அண்ணாமலை கருத்து..

Updated On : 19 நவம்பர், 2025 at 4:16 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு அரசு அனுப்பிய மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் குறைகள் இருப்பதால் மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மீது பழி போடாமல் புதிய அறிக்கையை தயார் செய்து தமிழக அரசு அனுப்ப வேண்டும் என்றும், குறைபாடுகள் உள்ள அறிக்கையை அனுப்பிவிட்டு மத்திய அரசை குறை கூறுவது கண்டனத்துக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டி மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை வெளியிட்டிருந்த அறிகையைக் குறிப்பிட்டு அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது,

தவறான விரிவான திட்ட அறிக்கையை ஒப்புதலுக்காக சமர்ப்பித்து, அதை நிராகரித்ததற்காக மத்திய அரசைக் குறை கூற திமுக வேண்டுமென்றே முயற்சிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் திறமையின்மையை நிரூபிப்பதாகக் கூறி, தூசி படிந்த நாடகப் புத்தகத்திலிருந்து ஒரு இலையை எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டு, விரைவில் விரிவான திட்ட அறிக்கையை ஒப்புதலுக்காக மீண்டும் சரிபார்த்து அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | கோவை, மதுரை மெட்ரோ... பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி மனு!

summary

Flaws in the metro project report sent by the Tamil Nadu government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.