முகப்பு
தற்போதைய செய்திகள்

டிட்வா புயல்: 54 விமானங்களின் சேவைகள் ரத்து

டிட்வா புயலால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக சென்னை விமானநிலையத்திலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் 12 விமானங்களின் சேவைகள் ரத்து தொடர்பாக...

Updated On : 29 நவம்பர், 2025 at 4:46 AM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை: டிட்வா புயலால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக சென்னை விமானநிலையத்திலிருந்து இயக்கப்படும் மற்றும் வருகை தரும் 54 விமானங்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

‘டிட்வா’ புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து இம்மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், டிட்வா பயுலால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக சனிக்கிழை சென்னை விமானநிலையத்தில் இருந்து இயக்கப்படும் மற்றும் வருகை தரும் 54 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 12 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று சென்னைை, பெங்களூரு, மும்பையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 11 சிறிய விமானங்களும், ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் 1 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வரும் விமானங்கள் என 54 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி பல வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால், பயணிகள் தங்களுக்கான விமான நிறுவன அலுவலகங்களை தொடா்புகொண்டு விமானத்தின் புறப்பாடு குறித்த தகவல்களை உறுதி செய்த பின்னா் பயணத்தை மேற்கொள்ள விமானநிலைய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

summary

Cyclone ditwah: today 24 flights cancelled

முழு கட்டுரையைப் படிக்க →