நிலநடுக்கம் 
தற்போதைய செய்திகள்

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

மியான்மரில் வியாழக்கிழமை அதிகாலை 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

நேபிடாவ் (மியான்மர்): மியான்மரில் வியாழக்கிழமை அதிகாலை 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தேசிய நில அதிர்வு மைய அறிக்கையின்படி, மியான்மரில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 3.01 மணியளவில் நிலக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கமான ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கமானது நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர், பொருள் சேதங்கள் மற்றும் பாதிப்பு குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

இருப்பினும், மிதமான அளவிலான நிலநடுக்கம் என்பதால் பெரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடான மியான்மரில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

An earthquake of magnitude 3.1 jolted Myanmar on late Wednesday night, as per the National Centre for Seismology.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் பிரதமர் மோடி! உற்சாக வரவேற்பு!

இது Middle Class மக்களின் கதை! Mask இயக்குநர் விக்ரணன் அசோக் - நேர்காணல்! | Kavin | Andrea

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நவ.24ல் மண்டலமாக வலுப்பெறும்!

பிக் பாஸுக்குப் பிறகு... பவித்ரா ஜனனியின் புதிய தொடர்!

செபியில் உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT