சா்ச்சைக்குரிய கோல்ட்ரிஃப் மருந்து 
தற்போதைய செய்திகள்

கோல்ட்ரிஃப் இருமல் மருந்து உட்கொண்ட மேலும் 2 குழந்தைகள் இறப்பு; உயிரிழப்பு 24-ஆக அதிகரிப்பு

நாக்பூரில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மேலும் இரு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

நச்சுத்தன்மையுள்ள ரசாயனம் கலந்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டதால், நாக்பூரில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மேலும் இரு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு, தமிழ்நாட்டில் சம்பந்தப்பட்ட இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பெண் வேதியியல் ஆய்வாளரைக் கைது செய்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டதால், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் குழந்தைகளுக்கு திடீரென சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பந்தப்பட்ட இருமல் மருந்தில் நச்சுத்தன்மையுள்ள ரசாயனக் கலப்பு உறுதி செய்யப்பட்டதால், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவன உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இருமல் மருந்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மகாராஷ்ரம் மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் செப்டம்பர் 14 முதல் சிகிச்சை பெற்று வந்த சிந்த்வாரா மாவட்டத்தின் சௌராய் பகுதியைச் சேர்ந்த மூன்றரை வயது அம்பிகா விஸ்வகர்மா, சிந்த்வாராவில் சிகிச்சைப் பெற்றுவந்த மற்றொரு 9 மாதக் குழந்தையும் புதன்கிழமை கடுமையான சிறுநீரக செயலிழப்பு காரணமாக இறந்தார்.

இதையடுத்து, இறப்பு எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளதாக சிந்த்வாரா மாவட்ட கூடுதல் ஆட்சியர் தீரேந்திர சிங் தெரிவித்தார். மேலும், இருமல் மருந்து உட்கொண்டதால் கடுமையான சிறுநீரக செயலிழப்பு காரணமாக செப்டம்பர் 3 முதல் சிந்த்வாரா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 21 குழந்தைகள் இறந்துள்ளனர்.

பந்துர்னா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 24 குழந்தைகள் இறந்துள்ளனர்.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் முகாமிட்டு இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு, தமிழ்நாட்டில் சம்பந்தப்பட்ட இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் 61 வயதுடைய பெண் வேதியியல் ஆய்வாளரைக் கைது செய்துள்ளது. இவர் போக்குவரத்து காவலில் மத்தியப் பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்காக இருப்பதாக தெரிகிறது.

அக்டோபர் 11 ஆம் தேதி ஸ்ரீசென் பாா்மா நிறுவனத்தின் 75 வயதான உரிமையாளர் ரங்கநாதன் கோவிந்தன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்த வழக்கில் நடைபெற்ற இரண்டாவது கைது. மேலும், இந்த வழக்கில் இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் அரசு மருத்துவர் பிரவீன் சோனி, இருமல் மருந்தின் உள்ளூர் ஸ்டாக்கிஸ்ட் ராஜேஷ் சோனி மற்றும் அப்னா மெடிக்கல் ஸ்டோரின் மருந்தாளுநர் சௌரப் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Acute kidney failure caused by poisoning from Coldrif cough syrup has claimed the life of one more child from Madhya Pradesh, taking the total death toll from the tragedy to 24.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷ்ணு எடவன் இயக்கத்தில் விக்ரம்!

தமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சி: இபிஎஸ்

லண்டனில் வெண்ணிலவுச் சாரல்... ரக்ஷிதா சுரேஷ்!

டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டனா?

வெளிநாட்டு வேலை என்ற பெயரில் ரஷியா சென்ற இளைஞர்! உக்ரைனுக்கு எதிரான போரில்

SCROLL FOR NEXT