கோல்ட்ரிஃப் இருமல் மருந்து உட்கொண்ட மேலும் 2 குழந்தைகள் இறப்பு; உயிரிழப்பு 24-ஆக அதிகரிப்பு
நாக்பூரில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மேலும் இரு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
நச்சுத்தன்மையுள்ள ரசாயனம் கலந்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டதால், நாக்பூரில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மேலும் இரு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு, தமிழ்நாட்டில் சம்பந்தப்பட்ட இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பெண் வேதியியல் ஆய்வாளரைக் கைது செய்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டதால், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் குழந்தைகளுக்கு திடீரென சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
சம்பந்தப்பட்ட இருமல் மருந்தில் நச்சுத்தன்மையுள்ள ரசாயனக் கலப்பு உறுதி செய்யப்பட்டதால், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவன உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இருமல் மருந்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மகாராஷ்ரம் மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் செப்டம்பர் 14 முதல் சிகிச்சை பெற்று வந்த சிந்த்வாரா மாவட்டத்தின் சௌராய் பகுதியைச் சேர்ந்த மூன்றரை வயது அம்பிகா விஸ்வகர்மா, சிந்த்வாராவில் சிகிச்சைப் பெற்றுவந்த மற்றொரு 9 மாதக் குழந்தையும் புதன்கிழமை கடுமையான சிறுநீரக செயலிழப்பு காரணமாக இறந்தார்.
இதையடுத்து, இறப்பு எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளதாக சிந்த்வாரா மாவட்ட கூடுதல் ஆட்சியர் தீரேந்திர சிங் தெரிவித்தார். மேலும், இருமல் மருந்து உட்கொண்டதால் கடுமையான சிறுநீரக செயலிழப்பு காரணமாக செப்டம்பர் 3 முதல் சிந்த்வாரா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 21 குழந்தைகள் இறந்துள்ளனர்.
பந்துர்னா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 24 குழந்தைகள் இறந்துள்ளனர்.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் முகாமிட்டு இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு, தமிழ்நாட்டில் சம்பந்தப்பட்ட இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் 61 வயதுடைய பெண் வேதியியல் ஆய்வாளரைக் கைது செய்துள்ளது. இவர் போக்குவரத்து காவலில் மத்தியப் பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்காக இருப்பதாக தெரிகிறது.
அக்டோபர் 11 ஆம் தேதி ஸ்ரீசென் பாா்மா நிறுவனத்தின் 75 வயதான உரிமையாளர் ரங்கநாதன் கோவிந்தன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்த வழக்கில் நடைபெற்ற இரண்டாவது கைது. மேலும், இந்த வழக்கில் இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் அரசு மருத்துவர் பிரவீன் சோனி, இருமல் மருந்தின் உள்ளூர் ஸ்டாக்கிஸ்ட் ராஜேஷ் சோனி மற்றும் அப்னா மெடிக்கல் ஸ்டோரின் மருந்தாளுநர் சௌரப் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Acute kidney failure caused by poisoning from Coldrif cough syrup has claimed the life of one more child from Madhya Pradesh, taking the total death toll from the tragedy to 24.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.