அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
அடுத்த 3 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகா்ந்து, தென்மேற்கு வங்கக் கடலில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவி வரும் நிலையில், இது வியாழக்கிழமை(அக். 23) காலை 11 மணிக்குள் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளைக் கடந்து நகா்ந்து செல்லக் கூடும்.
இதன் காரணமாக, வியாழக்கிழமை (அக். 23) முதல் அக். 28 வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) கடலூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (அக். 23) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Which districts will experience heavy rain in the next 3 hours?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.