நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மத்திய இணையமைச்சர் எல். முருகன். 
தற்போதைய செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் மரியாதை!

நாடாளுமன்ற வளாகத்தில் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு, மத்திய இணையமைச்சர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு, மத்திய இணையமைச்சர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தேவரின் நினைவிடத்தில் மலர் தூவியும், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மத்திய இணையமைச்சர் எல். முருகன்,பாஜக நாடாளுமன்ற அலுவலகச் செயலாளர் வேணுகோபால் உள்ளிட்ட தில்லி வாழ் தமிழ் மக்கள்.

இந்நிலையில், தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள தேவரின் திருவுருவச் சிலைக்கு, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வின் போது, பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற அலுவலகச் செயலாளர் வேணுகோபால் உள்ளிட்ட தில்லி வாழ் தமிழ் மக்கள் பலரும் உடன் கலந்து கொண்டனர்.

Union Minister L. Murugan pays tribute to Pasumpon Muthuramalinga Thevar...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயிலாடுதுறை: 12 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட அங்காளம்மன் சிலை தென்குடிக்கு அனுப்பி வைப்பு

3 நாட்டுத் துப்பாக்கி, குண்டுகள் பறிமுதல்

காரைக்கால் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

முன்னூா் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20 இயற்கை முகாம்கள் நடத்தப்படும்

SCROLL FOR NEXT