கோப்புப் படம். 
தற்போதைய செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 31) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 31) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வெள்ளிக்கிழமை (அக். 31) முதல் நவ. 5 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 31) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

அந்தமான் மற்றும் அதனையொட்டிய மத்திய மத்திய கிழக்கு அரபிக் கடலில் சனிக்கிழமை(நவ.1) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் அடுத்த 2 நாள்களில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chance of moderate rain in Tamil Nadu and Puducherry!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாடாளுமன்ற கட்டடத்தில் பள்ளி மாணவர்களுடன் ராகுல் காந்தி

பிபிசிஎல் நிகர லாபம் 169% உயர்வு!

ராஜராஜ சோழன் சதய விழா! 400 நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய புஷ்பாஞ்சலி!!

கரூர் பலி: சம்பவ இடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT