கோவை: ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடிவடையும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர்-2 பெங்கல் வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெயிலர் - 2 படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் முடிவடையும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நான் ஜெய்லர்- 2 படப்பிடிப்புக்காக கேரளம் செல்வதற்காக புதன்கிழமை கோவை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
நான் ஜெய்லர்- 2 படப்பிடிப்புக்காக கேரளம் மாநிலம் பாலக்காடு செல்கிறேன். அங்கு 6 நாள்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்கிறேன். படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று ரஜினிகாந்த் கூறினார்.
அப்போது நடிகர்களுக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா ? என்று செய்தியாளர்களின் கேளிவிக்கு, நோ கமெண்ட்ஸ் என்று கூறிவிட்டு ரஜினிகாந்த் புறப்பட்டுவிட்டார்.
யாத்ரி சேவா திவாஸ் நாளையொட்டி கோவை விமான நிலையத்தில் அவிநாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் படுகர் நடனமாடி பயணிகளை வரவேற்றனர். அப்போது, சென்னையிலிருந்து வந்த நடிகர் ரஜினிகாந்த் உடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.