தற்போதைய செய்திகள்

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

மும்பையில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் நான்கு வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் நிலையில்...

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: மும்பையில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியில் நான்கு வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் நிலையில், பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

திங்கள்கிழமை குழந்தையின் பாட்டி அவளை பள்ளியில் விட்டுச் சென்ற பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளதாக கோரேகான் காவல் நிலைய அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.

குழந்தை பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், தனக்கு சோர்வாக இருப்பதாகவும் உடல் முழுவதும் வலிப்பதாகவும் பொற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது.

இதையடுத்து குழந்தையின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் அளித்து, போலீசில் புகார் அளித்தனர்.

குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளியின் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருவதாக கோரேகான் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

A four-year-old girl has allegedly been sexually assaulted at a well-known school in Mumbai, leading to the arrest of a female staffer, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை: அமைச்சர் எ.வ.வேலு

சிவப்பு கம்பள வரவேற்பு... பிரணிதா!

மிடில் ஆர்டரில் கவனம் தேவை, இந்தியாவின் சவாலுக்குத் தயார்: பாகிஸ்தான் கேப்டன்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT