சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து பலியான புருஷோத்தமன் (27) 
தற்போதைய செய்திகள்

செஞ்சி: தனியார் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து ஒருவர் பலி

செஞ்சி அருகே தனியார் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

செஞ்சி அருகே தனியார் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சி- திருவண்ணாமலை சாலையில் செம்மேடு கிராமத்தில் அமைந்துள்ள தனியார் சர்க்கரை ஆலையில் புதன்கிழமை காலை பணியில் இருந்த பாலப் பாடி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் புருஷோத்தமன் (27) என்பவர் சர்க்கரை பாகு செல்லும் குழாயை சரி பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென பாய்லர் வெடித்து சிதறியது. இதில் படுகாயம் அடைந்த புருஷோத்தமன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த செஞ்சி மற்றும் நல்லான் பிள்ளை பெற்றால் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

One killed in boiler explosion at private sugar mill near Gingee

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லையா? ஏன்?

நிவின் பாலியின் புதிய பட ரிலீஸ் தேதி!

தவெக கொடி: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மிக்-21 டூ விண்வெளி..! போர் விமான அனுபவத்தை நினைவுகூர்ந்த சுபான்ஷு சுக்லா!

987 வீடுகளை உரிமையாளர்களிடம் உரிய நேரத்தில் கட்டி ஒப்படைத்த அமர்பிரகாஷ்

SCROLL FOR NEXT