ஜார்க்கண்டில் காட்டு யானைக் கூட்டம் தாக்கியதில் 6 பேர் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள கோண்ட்வார் கிராமத்தில் வியாழக்கிழமை இரவு காட்டு யானைக் கூட்டம் தாக்கியதில் 6 பேர் பலியாகினர். பலியானவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடங்குவர்.
பலியானவர்கள் சூரஜ் பூயன் (55), அவரது மருமகள் சுமன் தேவி (25), சுமனின் இரண்டு மைனர் குழந்தைகள், மங்க்ரா பூயன் (58), மற்றும் தனேஷ்வர் ராம் (சுமார் 55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சூரஜ் பூயனும் அவரது குடும்பத்தினரும் தங்கள் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
கட்டடம் தாக்கப்பட்டபோது அவர்களால் தப்பிக்க முடியவில்லை. சத்தம் கேட்டு, கிராமவாசிகள் ஓடிவந்து, டிரம் அடித்து, பாத்திரங்களை அடித்து, டார்ச்ச்களை மின்னும் வகையில் விலங்குகளை விரட்ட முயன்றனர். பிறகு யானைகள் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் புகுந்தது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடனேயே, மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் வனத் துறையைச் சேர்ந்த குழுக்கள் விரைந்தன. உடல்கள் கூராய்வுக்கு அனுப்பப்பட்டு, சொத்து சேதம் குறித்த மதிப்பீடு தொடங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
மேலும் இரவு நேரங்களில் குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். கிராமவாசிகளின் கூற்றுப்படி, ஐந்து யானைகள் கொண்ட கூட்டம் அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கிராமத்திற்குள் நுழைந்தது.
அப்போது பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். யானைகள் பல மண் வீடுகளை சேதப்படுத்தியதாகவும், குடியிருப்பு வழியாகச் செல்லும்போது சுவர்கள் மற்றும் கதவுகளை உடைத்ததாகவும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.