முகப்பு
தற்போதைய செய்திகள்

வாக்கு சேகரிப்பின் போது மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்: மருத்துவமனையில் அனுமதி!

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் குறித்து...

Updated On : 9 ஏப்ரல் 2026, 3:27 pm IST
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் - டிஎன்எஸ்
பகிர்:

தஞ்சாவூர்: Regarding AIADMK candidate Ilamathi Subramanian, who collapsed while engaged in campaigning...

திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன், வியாழக்கிழமை ஆடுதுறை, வண்ணக்குடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Advertisement

Advertisement

அப்போது வெயிலின் தாக்கம் அதிகமானதால் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது பிரசார வாகனத்திற்குள் வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆடுதுறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் மயங்கி விழுந்த செய்தி அறிந்து கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இது குறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் அழகேசன், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

summary

Regarding AIADMK candidate Ilamathi Subramanian, who collapsed while engaged in campaigning...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.