பிரதமர் நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியா அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால ஒப்பந்தத்திற்கான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தையை வாய்ப்பு கிடக்க உள்ளது. ஏற்றுமதி அதிகரிப்பு நமது பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில்,
பிரதமர் நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியா அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால ஒப்பந்தத்திற்கான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தையை வாய்ப்பு கிடக்க உள்ளது. ஏற்றுமதி அதிகரிப்பு நமது பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
இதன் ஒரு பகுதியாக, அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கான பரஸ்பர வரிகளை 18% ஆகக் குறைக்கும். இது உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் ஜவுளி மற்றும் ஆடை, தோல் மற்றும் காலணிகள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள், கரிம ரசாயனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இயந்திரங்கள் போன்ற முக்கியத் துறைகளில் ஒரு பெரியளவில் சந்தை வாய்ப்பு கிடைக்கும்.
கூடுதலாக, பொதுவான மருந்துகள், ரத்தினங்கள் மற்றும் வைரங்கள், மற்றும் விமான பாகங்கள் உள்ளிட்டவற்றுக்கான வரிகள் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும். இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்திறன் மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டம் மேலும் மேம்படுத்தப்படும்.
இந்தியா, பிரிவு 232-இன் கீழ் விமான பாகங்களுக்கு விலக்குகள், வாகன பாகங்களுக்கு கட்டண விகித ஒதுக்கீடு மற்றும் பொதுவான மருந்துகள் குறித்த பேச்சுவார்த்தை முடிவுகளையும் பெறும். இது இந்தத் துறைகளில் உறுதியான ஏற்றுமதி ஆதாயங்களுக்கு வழிவகுக்கும்.
அதே நேரத்தில், இந்த ஒப்பந்தம் மக்காச்சோளம், கோதுமை, அரிசி, சோயா, கோழி, பால், சீஸ், எத்தனால் (எரிபொருள்), புகையிலை, சில காய்கறிகள், இறைச்சி போன்ற முக்கியமான விவசாய மற்றும் பால் பொருட்களை முழுமையாகப் பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், கிராமப்புற வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் வகையில் வடிவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், இந்தியா மற்றும் அமெரிக்கா நமது மக்களுக்கும் வணிகங்களுக்கும் நிலையான வளர்ச்சிக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், பொருளாதார ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவதில் கவனம் செலுத்த உதவும்.
மேலும், அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளிலும் நமது விவசாயிகளின் நலன்களே முதன்மையானவை. கிராமப்புற வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதில் மோடி அரசு முழு உறுதியுடன் உள்ளது என கூறியுள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடைக்கால ஒப்பந்தம் மூலம் இந்தியப் பொருட்களுக்கு முன்னுரிமை அணுகலைப் பெறும் அதே வேளையில், தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மசாலாப் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள், பால் பொருட்கள், கோழி மற்றும் இறைச்சி உட்பட பல முக்கியமான விவசாயத் துறைப் பொருட்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.