கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்  
தற்போதைய செய்திகள்

நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த ஒரே நாடு இந்தியா: இஸ்ரோ தலைவர் பெருமிதம்

நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பெருமிதத்துடன் தெரிவித்த தொடர்பாக....

இணையதளச் செய்திப் பிரிவு

நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் நவக்கரையில் உள்ள ஏஜேகே கல்லூரியில் தேசிய அளவிலான ஏஜேகே சிறந்த கல்வியாளர் விருதுகள் மற்றும் நூல் வெளியீட்டு விழா விழாவில் சிறப்பு விருந்தினராக விண்வெளித்துறை தலைவரும் மற்றும் இந்தியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் வி. நாராயணன், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி மற்றும் தலைவர் ஜோ.கே கிழக்கூடன் ஆகியோர் கலந்து கொண்ட நூலை வெளியிட்டு தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரம் மற்றும் கேரளம் மாநிலத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுடன் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பேசியதாவது :

விண்வெளி திட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. அதில் விண்வெளியில் விண்வெளி நிலையம் அமைக்கும் திட்டம், ஆள்களை நிலாவுக்கு அனுப்பி திருப்பி வரக்கூடிய திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை 60-க்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து செய்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், மாணவர்களுக்கு மூன்று அறிவுரைகளை வழங்கினார். அதாவது இந்திய மாணவர்கள் செய்முறை மற்றும் கருத்தியல் கோட்பாடுகளை படிக்க வேண்டும். படிப்பு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த செயல்திறனுடன் செயல்பட வேண்டும். அதேபோன்று நல்ல மாணவர்களாக வளர வேண்டும் என்று அவர் கூறினார்.

India is the only country to have landed on the lunar south pole says ISRO Chairman proudly stated.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாப்பாரட்டியில் அனுமதியின்றி மண் கடத்திய லாரி பறிமுதல்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

கோயிலில் சாமி கும்பிட்ட பெண்ணிடம் தங்கச் சங்கிலி திருட்டு

எஃப்பிஐ மாதிரியில் புதிய காவல் அமைப்பு: பிரிட்டன் திட்டம்

150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT