மார்ச்.15 இல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.15) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்து...
சென்னை: முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.15) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.15) காலை 10.30 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.