முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏழுமலையானுக்கு ரூ. 1 கோடி நன்கொடை!

திருமலை தேவஸ்தானத்தின் ‘ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி’ திட்டத்துக்கு ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது குறித்து...

Updated On : 22 மார்ச், 2026 at 2:21 PM
திருமலை தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலா் சி.எச். வெங்கையா சௌத்ரியிடம் ரூ.1 கோடி நன்கொடைக்கான வரைவோலையை வழங்கிய சென்னையைச் சோ்ந்த சுப்பாராவ் அப்பரல்ஸ் நிறுவனத்தார். உடன் திருமலை தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி. - திருமலை தேவஸ்தானம்
பகிர்:

திருப்பதி: சென்னையைச் சோ்ந்த சுப்பாராவ் அப்பரல்ஸ் நிறுவனம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை திருமலை தேவஸ்தானத்தின் ‘ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி’ திட்டத்துக்கு ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மாநிலம், சென்னையைச் சேர்ந்த சுப்பாராவ் அப்பரல்ஸ் நிறுவனத்தார் ஜெ. ராஜா ரமேஷ், ஞாயிற்றுக்கிழமை திருமலை தேவஸ்தானத்தின் ‘ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி’திட்டத்துக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தாா்.

நன்கொடைக்கான வரைவோலையை திருப்பதியில் உள்ள திருமலை தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலா் சி.எச். வெங்கையா சௌத்ரியிடம் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் திருமலை தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி கலந்துகொண்டாா்.

இந்த நிகழ்வில் நன்கொடையாளருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

summary

Subbarow Apparels, a Chennai-based firm, donated ₹1 crore on Sunday to the TTD-run ‘Sri Balaji Arogya Varaprasadini’ scheme (SVIMS).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.