சர்வம் சிவமயம் - நாட்டிய நிகழ்ச்சி
ஸ்ரீ பாதம் அகாடமி ஆப் டான்ஸ் பள்ளியின் நாட்டிய நிகழ்ச்சி 10/7/2016
பிரபல நடனக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் அவர்களின் ஸ்ரீ பாதம் அகாடமி ஆப் டான்ஸ் பள்ளியின் நாட்டிய நிகழ்ச்சி 10/7/2016 அன்று சென்னை தி.நகர். கிருஷ்ண கானசபாவில் நடைபெற இருக்கிறது.நடனப் பள்ளியின் இயக்குனர் குரு ஸ்ரீமதி லக்ஷ்மி வெங்கடேஷ் அவர்களிடம் பயிற்சி பெற்ற திறமையான மாணவிகள் குழு இந்த நாட்டிய நிகழ்ச்சியை வழங்க இருக்கிறது.
சர்வம் சிவமயம் எனும் இந்த நாட்டிய நிகழ்வின் அடிப்படை அடவுகள் மற்றும் முத்திரைகளால் சிவனது தெய்வீக தோற்றப்பொலிவை விவரித்து சிவ தரிசனம் இந்த பிரபஞ்சம் முழுவதும் அனைத்து ரூபங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பதாக உணர செய்வதே ஆகும் என அழைப்பிதழ் தெரிவிக்கிறது .
சிவ பெருமானின் பஞ்சபூத திருத்தலங்களில் ஆகாயத்தலமாக போற்றப் படுவது சிதம்பரம் நடராஜர் திருத்தலம் .நாட்டிய நிகழ்வின் முதல் பாதி சிவ மங்கலாஸ்தகம் மற்றும் சிவ பஞ்ச முக ஸ்துதியில் தொடங்கி குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்து நீண்டு சுழன்றாடும் சடை முடியும் ஜடாமுடியில் பிரவகித்து வழிந்தோடும் கங்கா தேவியுமாக சிவனின் தேஜோமய தோற்றப் பொலிவு தஞ்சாவூர் சங்கர அய்யரின் லதாங்கி வர்ணத்தில் அமைந்த கீர்த்தனையோடு முடிவுகிறது .
Advertisement
இரண்டாம் பாதி நந்தனார் கதை நந்தனார் கதை தமிழ் கலை இலக்கிய உலகில் திரைப்படமாக புதினமாக நாட்டுப்புறப் பாடல்களாக பலரால் பல விதமாக மறு ஆக்கம் செய்யப் பட்டிருந்தாலும் கோபால கிருஷ்ண பாரதியாரின் பாடல் வழியாக நாட்டிய அடவுகளில் நாம் நந்தனாரைக் காண்பது இதம்.
சிவ ஸ்துதியில் தொடங்கி நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் கதையோடு நிகழ்ச்சி முடிவடைகிறது .
சர்வம் சிவமயம்
கீர்த்தனை மற்றும் நந்தனார் கதை வழியாக சிவ தரிசனம் பெறச் செய்வதே இந்த நாட்டிய நிகழ்வின் முக்கிய நோக்கம் என குரு .ஸ்ரீமதி .லக்ஷ்மி வெங்கடேஷின் அழைப்பிதழ் தெரிவிக்கிறது. நாட்டியபிரியர்கள் நாட்டியமாணவிகள்இ ஆர்வம் இருப்போர் அனைவரும் கலந்து கொள்ளலாம் .
நாள்- 10/7/16
இடம்-தி.நகர் கிருஷ்ண கான சபா,சென்னை
அடுத்ததாக இதே நாட்டிய நிகழ்ச்சி சிதம்பரம் நடராஜர் சன்னதியிலும் நடைபெற இருக்கிறது;
நாள்- 17/7/16
இடம்-தில்லை நடராஜர் ஆலயம் ,சிதம்பரம்