மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!
மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது தொடர்பாக..
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வந்த முதல்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 89.93% வாக்குகள் பதிவாகியுள்ளது.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்றது.
Advertisement
Advertisement
இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப். 29-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சிக்கு வர முனைப்பு காட்டும் நிலையில், அக்கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக களமிறங்கியுள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகளும் களத்தில் உள்ளன.
தற்போது முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 152 தொகுதிகளில் கடந்த 2021 தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 93 இடங்களையும், பாஜக 59 இடங்களையும் கைப்பற்றியிருந்தன.