உலகமேடை நாடக வரலாற்றில் முதன்முறையாக, தொடர்ந்து 28 மணிநேரம் ஒரு முழு நீள மேடை நாடகம் அரங்கேறப்போகிறது. அன்னைத் தமிழை வளர்ப்பதில் என்றுமே ஆர்வமாக இருக்கும் வெளிநாட்டுத் தமிழர்களின் முயற்சி இது. சிங்கப்பூரில் இன்று (13.7.19) நடைபெற இருக்கிறது. கின்னஸ் சாதனையாகவும் இது பதிவு செய்யப்படவிருக்கிறது.
தங்கள் முயற்சியை தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் அறிந்து கொள்ள வேண்டும், உலக முழுவதும் உள்ள தமிழ் மக்கள் நேரலை மூலமாக ‘கவசம்’ நாடகத்தைப் பார்த்து மகிழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். சிங்கப்பூர் தமிழர்களின் பெருமைக்குரிய முயற்சி இது.
கவசம் நாடகம் குறித்தும், அதிபதி நாடகக்குழு குறித்தும் மேல்விவரங்கள் வேண்டுபவர்கள், தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸப் எண்: Subarshene +6582012323
நேரலையில் நாடகத்தைப் பார்த்து மகிழ...
- எனும் யூடியூப் முகவரிக்குச் செல்லலாம்.