முகப்பு
அழகே அழகு

சருமத்தில் உள்ள கருமையை நீக்க...

வெயில் காலங்களில் சூரியக்கதிர்களின் அதிக தாக்கத்தினால் பலரும் சருமம் கருமையாகி விடுகிறது. சன்ஸ்க்ரீன் லோஷன்களை பயன்படுத்தினாலும் வெயிலில் சென்றால் சற்று நேரத்தில் முகத்தில் கருமை படர்ந்துவிடும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
கோப்புப்படம்
பகிர்:

வெயில் காலங்களில் சூரியக்கதிர்களின் அதிக தாக்கத்தினால் பலருக்கும் சருமம் கருமையாகி விடுகிறது. என்னதான் சன்ஸ்க்ரீன் லோஷன்களை பயன்படுத்தினாலும் வெயிலில் சென்றால் சற்று நேரத்தில் முகத்தில் கருமை படர்ந்துவிடும்.

வெயிலால் ஏற்பட்ட கருமையைப் போக்க செயற்கை கிரீம்களை பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே இதை சரிசெய்ய முடியும். இயற்க்கையான பொருள்களால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. 

அந்தவகையில் முகம் மட்டுமின்றி உடலில் கருமையாக இருக்கும் பகுதிகளில் எலுமிச்சைச்சாறு தடவி வந்தால் கருமை படிப்படியாக மறைந்துவிடும். எலுமிச்சைச் சாறை சில சொட்டுகள் தண்ணீர் கலந்து நேரடியாக பயன்படுத்தலாம். அத்துடன் சிறிதளவு உப்பு கலந்தும் பயன்படுத்தலாம். 

Advertisement

எலுமிச்சைச் சாற்றில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து அந்த கலவையை முகத்தில் தடவி 15 முதல் 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.

கடலை மாவுடன் சிறிதளவு மஞ்சள், கொஞ்சம் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம். 

கற்றாழை ஜெல் முகத்தின் கருமையை நீக்குவதோடு சருமத்துக்கு ஈரப்பதத்தையும் பொலிவையும் கொடுக்கும். கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து அலசவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments