முகப்பு
செய்திகள்

இளம்பெண்களிடையே அதிகரித்து வரும் நுரையீரல் புற்றுநோய்!

ஆண்களை விட இளம்பெண்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:45 PM
பகிர்:

ஆண்களை விட இளம்பெண்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கனடாவின் கல்காரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இளம் வயதினரிடையே நுரையீரல் புற்றுநோய் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பீடியாட்ரிக்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், 40 நாடுகளில் உள்ள 30-64 வயதுக்கு இடைப்பட்டவர்களிடையே ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அதில் சமீபத்திய காலங்களில் ஆண்களை விட பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் தாக்கம் அதிகம் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. புவியியல் காரணிகள் மற்றும் வாழ்க்கை முறைகள் இதற்கு காரணமாக அமைகின்றன. மேலும், குறிப்பாக பெண்களிடையே அடினோகார்சினோமா நுரையீரல் புற்றுநோயின் தாக்கம் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளில், நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு விகிதங்கள் இளம் வயது ஆண்களிடையே குறைந்துவிட்டன. அதே சமயம் பெண்களிடையே  விகிதங்கள் பல நாடுகளில் வேறுபடுகின்றன.

முன்னதாக, பெண்களை விட ஆண்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகமாக இருந்தது. காரணம், ஆண்கள் பலர் அதிக எண்ணிக்கையில் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆனால், தற்போது பெண்களிடையே புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்கிறது என்ற ஆய்வு முடிவுகள் உண்மையில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த எதிர்கால ஆய்வுகள் தேவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.