ஸ்பெஷல்

வருங்கால மாமியாருக்கு மருமகள் எழுதிய கடிதம்!

மாமியாரும் ஒரு வகையில் அம்மா தான். அந்த அம்மாவை நாம் எப்படி கொண்டாடுகிறோம் என்பதில் அமைகிறது மாமியார், மருமகள்களுக்கிடையிலான உறவின் அற்புத முடிச்சு.

கார்த்திகா வாசுதேவன்

மாமியார், மருமகள் உறவென்பது மிக அருமையானதொரு பந்தம். நாம் வாழும் இந்தப் பரந்த உலகில் நல்ல உள்ளம் கொண்ட, மருமகள்கள் மீது அதீதப் பாசமும், புரிதலும் கொண்ட அருமையான மாமியார்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு சரியான புரிதலை ஏற்படுத்திக் கொள்வதென்பது மருமகள்களின் சாமர்த்தியத்தையும், சகிப்புத்தன்மையையும் பொருத்தது. மாமியாரும் ஒரு வகையில் அம்மா தான். அந்த அம்மாவை நாம் எப்படி கொண்டாடுகிறோம் என்பதில் அமைகிறது மாமியார், மருமகள்களுக்கிடையிலான உறவின் அற்புத முடிச்சு. பெண்களுக்கு மாமியார் உறவு இணக்கமாக அமைந்து விட்டால் திருமண பந்தத்தில் பாதி வெற்றி என்றே சொல்லலாம்.

அந்த வகையில் எங்களுக்குக் கடிதம் எழுதியுள்ள வாசகி ப்ரியா எதிர்காலத்தில் மாமியார் மெச்சும் சமர்த்து மருமகளாக வாழ தினமணி வாழ்த்துகிறது.

இதோ... கரூரிலிருந்து ப்ரியா தனது வருங்கால மாமியாருக்கு நேசத்துடன் எழுதிய கடிதம் வாசகர் பார்வைக்கு...

ப்ரியா தன் மாமியாரை, அம்மா என்றழைக்கவே விரும்புவதாக கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். வாழ்த்துக்கள் ப்ரியா! புகுந்த வீட்டில் உங்களது மற்றொரு அம்மாவுடனும், கணவருடனும் மனமொத்து வாழ தினமணியின் வாழ்த்துக்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொய் புகார் கொடுக்க சொன்னது யார்? அந்த பெண்ணைக் கைது செய்யணும்! அஜித் குமாரின் தாய் பேட்டி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

”விஜய்யுடன் சேர முயற்சித்த காங்கிரஸ்! முடியாமல்தான் திமுகவுடன் இருக்கிறார்கள்!” நயினார் நாகேந்திரன்

EPS-க்கு தோல்வி பயம்! செங்கோட்டையன் விமர்சனம்! | TVK | ADMK

மணிப்பூரில் பதற்றம்.. முதல்வர் பதவியேற்ற மறுநாளே கலவரம்!

SCROLL FOR NEXT