இந்தத் தலைமுறை நடிகர்கள் மற்றும் நடிகைகளிடையே நட்புணர்வும், ஒற்றுமையும், கலகலப்பான உரையாடலும் குறைவாக இருப்பதற்கு முதல் காரணமே இந்த கேரவன் கலாசாரம் தான் என்கிறார் நடிகை நளினி. நளினி 80 களில் பிரபல ஹீரோயின். அவர் தனது சமகால நடிகைகளாகக் குறிப்பிடும் அம்பிகா, கீதா, ஊர்வசி, வனிதா, சாதனா அனைவருடனும் இன்றும் கூட அதே இனிமையும், நெருக்கமும் நிறைந்த நட்புறவுடன் இருக்க முடிகிறதென்று குறிப்பிடுகிறார். காரணம் அப்போதெல்லாம் எத்தனை பிஸியான நடிகர், நடிகைகளாக இருந்தாலுமே படப்பிடிப்பு இடைவேளைகளில் நடிகர், நடிகைகள் கும்பலாக அமர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் பேசிச் சிரித்துக் கொண்டு, கேலி செய்து கொண்டு உணவு உண்பது வழக்கம். ஆனால் இன்று அப்படியல்ல, கேரவன் கலாச்சாரம் வந்த பிறகு ஷாட் முடிந்ததும் நடிகர், நடிகைகள் கேரவனுக்குள் போய் உட்கார்ந்து கொள்கிறார்கள். பிறகெப்படி சக நடிகர், நடிகைகளுடன் நட்புறவோடு இருக்க முடியும்? என்கிறார்.