உள்ளாட்சித் தேர்தல் 2019

மதுரையில் பாஜக வேட்பாளர் மீது திமுக செயலர் தாக்குதல்?

DIN

மதுரை ஒத்தக்கடை வாக்குச்சாவடி அருகே பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்து உள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, மதுரையில் தொள்ளாயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மொத்தம் 2,500 போலீஸார், 2 ஏடிஎஸ்பி மற்றும் 12 டிஎஸ்பிக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுசிறு பிரச்னைகள் தவிர்த்து மதுரை மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

திரு மோகூர் பாஜக வேட்பாளரை திமுக ஒன்றியச் செயலர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் புகார் அளித்தால் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT