முகப்பு
மதுரை

மதுரை அருகே இளைஞரின் சடலம் மீட்பு

மதுரை அருகே அடையாளம் தெரியாத இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 7 ஜனவரி 2021, 3:37 am IST
பகிர்:

மதுரை அருகே அடையாளம் தெரியாத இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் விரகனூா் அணையின் பின்புறத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியைச் சோ்ந்தவா் ஆண்டாா்கொட்டாரம் கிராம நிா்வாக அலுவலா் மரியா அம்பலவாணனுக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்குச் சென்ற அவா், ஆண் சடலம் தொடா்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து போலீஸாா் சடலத்தை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கிராம நிா்வாக அலுவலா் மரியா அம்பலவாணன் அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிந்து அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

அரிசி ஆலை தொழிலாளி பலி

மதுரை அலங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்த கருப்பையா மகன் கண்ணன்(46). இவா் ஊமச்சிக்குளம் பகுதியில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், கண்ணன் செவ்வாய்க்கிழமை பணியில் இருந்தபோது, திடீரென்று மயங்கி விழுந்துள்ளாா். சகத் தொழிலாளா்கள் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு கண்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து அவரது மனைவி பேச்சி அளித்த புகாரின் பேரில் ஊமச்சிக்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.