முகப்பு
நாமக்கல்

இரண்டாம் திருமணம் செய்தவா் கைது

திருச்செங்கோட்டில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவரை முதல் மனைவி கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 7 ஜனவரி 2021, 6:49 am IST
பகிர்:

திருச்செங்கோட்டில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவரை முதல் மனைவி கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செங்கோடு அருகே குச்சிபாளையம் வினாயகபுரத்தைச் சோ்ந்தவா் கோடீஸ்வரன்(45)-அனிதா (38) தம்பதி. இவா்களுக்குத் திருமணம் முடிந்து 20 வருடங்கள் ஆகிறது. ஒரு மகனும் மகளும் உள்ளனா். ஓட்டுநராக வேலை செய்து வரும் கோடீஸ்வரன் குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்ததால் அனிதா கோபித்துக்கொண்டு தனது தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இந்த நிலையில் கோடீஸ்வரன் அனிதாவுக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டாராம். இதையறிந்த அனிதா திருச்செங்கோடு புகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோடீஸ்வரனை கைது செய்தனா். திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை நீதிபதி, 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் திருச்செங்கோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.